எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில், ஜூலை.16 - காமராஜர் பிறந்த தினத்தை நாம் தமிழர் கட்சி பெருந்தலைவர் திருவிழாவாக நாகர்கோவிலில் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சியை உண்மையாக, நேர்மையாக இந்த மண்ணுக்கு நாங்கள் அர்ப்பணிக்கிறோம். பெருந்தலைவர் பயணித்த வழித்தடத்தில் நாங்கள் பயணிக்கிறோம். ஊழலற்ற நேர்மையான, உண்மையான மக்களாட்சி தந்த தலைவரின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்த விழாவை நாங்கள் கொண்டாடுகிறோம். கர்மவீரர் காமராஜர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார், பொன் முத்துராமலிங்கதேவர், மருதுபாண்டியர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், புலித்தேவன், தீரன் சின்னமலை, இரட்டை மலை சீனிவாசன், வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கம் இந்த தலைவர்கள் எல்லாம் சாதிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் பொதுவுடைமை தலைவர்களாக நமது முன்னோர்களாக அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்துவது, விழாக்களை நடத்துவது நாம் தமிழர் கட்சியின் கடமையாகும், பண்பாடாகும். எங்கள் பாட்டனார்களை நாங்களே மதிக்கவில்லை என்றால் யார் மதிப்பார்கள்? ஆகவே தான் அவர்களை நாங்கள் நினைவுகூருகிறோம். வருங்கால சந்ததியினருக்கு அவர்களின் பண்பினை, வீரத்தை, உணர்வை அடையாளம் காட்டுகிறோம்.
இந்த குமரி மாவட்ட மக்களால் குமரி தந்தை என்று அழைக்கப்படுகின்ற மார்ஷல் நேசமணிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் நெடுநாளைய விருப்பம். அதை உடனே அமைத்து தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறது.
மேலும் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைவதற்கு பாடுபட்ட பொன்னப்பா நாடாரையும் நினைவு கூர்ந்து அவருக்கு திருவுருவ சிலையும் நிறுவ வேண்டும் என்று நாங்கள் இந்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.
இலங்கைக்கு தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து தேவையற்றது. அவசியமில்லாதது. ஆகவே தான் தமிழக அரசு அந்த விழாவை
புறக்கணித்தது. அப்படி என்ன அவசியம் வேண்டி இருக்கிறது இங்குள்ள விளைச்சலை அங்கே கொடுப்பதற்கு அங்குள்ள பொருட்களை இங்கே கொண்டு வருவதற்கு? என் மக்கள் துன்பப்பட்டு துயரப்பட்டு உயிரையும் உடமையும் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் படகையும், கட்டுமரத்தையும் ஏன் நீந்தியும் கரை சேர்ந்தனர். அப்போது எல்லாம் ஏற்படுத்தாத இந்த படகு போக்குவரத்து இப்போது என்ன அவசியப்பட்டது. 100 ஆண்டுகளாக இல்லாத இந்த படகு போக்குவரத்துக்கு இப்போது என்ன தேவை வந்தது? உலக நாடுகளே இலங்கை செய்த போர்க்குற்றம் தவறானது என்று குற்றம் சாட்டும் பொழுது இந்தியா மட்டும் ஏன் மெளனம் சாதிக்கிறது. அந்த போர்க்குற்றத்தை ஆதரிக்கிறேன் என்று சொல்லலாம் அல்லது எதிர்க்கிறேன் என்று சொல்லலாம் எதுவுமே சொல்லாமல் மெளனம் சாதிப்பது இந்தியாவில் இருக்கும் 9 கோடி தமிழர்களையும் இளிச்சவாயன்களாக நினைப்பது. 9 கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வு தான் அ.தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஒரு மாநில அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு மதிப்பளிக்காமல் இருக்கிறது மத்திய அரசு. இதை விட வேதனை போருக்கு முன்னர் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளித்தது. இன்னும் இந்த பயிற்சி தொடர்கிறது. இது தான் பெரிய சேட்டையாக தெரிகிறது. இலங்கை ராணுவ அதிகாரிகளே சொல்கிறார்கள் இலங்கை ராணுவத்தின் தரத்தை உயர்த்துவதற்கு தான் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று குண்டு வெடித்து 18 பேர் பலி. மருத்துவமனைக்கு சென்று மன்மோகன்சிங் பார்க்கிறார், சோனியா காந்தி பார்க்கிறார். ஆளாளுக்கு போட்டி போட்டு துக்கம் விசாரிக்கிறார்கள். ஆனால் இலங்கை சிறிய நாடு. அந்த நாட்டில் வாழ்ந்த என் மக்கள் 554 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போய் பார்த்தார்களா இவர்கள்? துக்கம் தான் விசாரித்தார்களா? இவ்வளவு ஏன் இறந்தது தமிழர்கள் ஆனால் இவர்கள் துக்கம் விசாரித்ததோ சிங்களனிடம்.
எழவு விழுந்து வீட்டில் போய் துக்கம் விசாரிக்காமல் கொன்றவன் வீட்டில் போய் துக்கம் விசாரித்தார்கள். தமிழர்களின் உயிரை மதிக்கவில்லை. இதையெல்லாம் விட நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை இவைகளுக்கு இடையூறாக இருக்கிறது வீடுகள் என்று சொல்லி அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு தனியாக குடியை மாற்று வாரியத்தில் இருந்து வீடு தருகிறோம். அந்த குடிசை வீடுகளை விட்டு மாறுங்கள் என்று கூறுகிறார்கள். யானை, புலி போன்ற மிருகங்களுக்கு கொடுக்கிற மரியாதையை கூட தமிழனுக்கு கொடுக்கவில்லை அரசு.
யாரை கேட்டாலும் இலங்கையில் தமிழனுக்கும், சிங்களனுக்கும் நடக்கிற இந்த போராட்டாம், இந்த பிரச்சனை பல நாட்களாகவே இருக்கிறது என்கிறார்கள். அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று தானே நாங்கள் சொல்கிறோம். கடலில் மீன்பிடிப்பதில் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக்கொலை, குமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொலை, நாகை மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொலை இப்படி மாவட்டத்துக்கு பெயரை மட்டும் முன்னாடி வைத்த மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இது மீனவர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல் அல்ல, தமிழனின் மீது நடத்தப்படுகிற தாக்கல். கேரளாவிலும் மீனவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லை தாண்டுவதில்லையா? சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி மீனவனை சுடவில்லை, தமிழனை சுடுகிறது.
சமச்சீர்கல்வியை அ.தி.மு.க. அரசு எதிர்க்கவில்லை. அதனுடைய பாடத்திட்டங்கள் தரமாக இல்லை. கடந்த கால ஆட்சிக்கு புகழுரை வடிப்பது போன்று இருக்கிறது. ஆகவே அந்த பாடத்திட்டங்களை மாற்றபடவேண்டும். தரமான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதை இந்த ஆண்டே செய்வதற்கு போதுமான காலங்கள் இல்லை. ஆகவே இந்த ஆண்டு பழைய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டு சமச்சீர்க்கல்வியை கொண்டு வருவோம் என்கிறது அ.தி.மு.க. அரசு.
உண்மையிலேயே எங்களை பொறுத்தவரைக்கும் சமச்சீர்க்கல்வி என்பது பாடத்திட்டத்தில் மட்டும் இருந்தால் போதாது. கட்டிடவசதி, கழிப்பறை வசதி, விளையாட்டுத்துறை வசதி என எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் சமமாக இருக்க வேண்டும் என்பது தான் சமச்சீர்க்கல்வியின் நோக்கம். அதை செய்யவில்லை இந்த திட்டத்தை கொண்டு வந்தவர்கள். ஆகவே அ.தி.மு.க. அரசு அதனை கொண்டு வந்த பிறகு இதனை நிறைவேற்றலாம் என்று நினைத்திருக்கலாம். கல்வி வர்த்தகமாகி விட்ட இந்த நிலையில் தமிழக அரசு அரசு பள்ளிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய ஜனநாயகம் மாற்றப்பட வேண்டும். தேர்தல் முறைகளும் மாற்றப்பட வேண்டும். எனது நாட்டின் முதல் குடிமகனை நான் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் தான் வாழ்கிறேன். மத்தியில் ஆளுகின்ற கட்சியும், எதிர் கட்சியும் வேட்பாளரை நிறுத்துவார்களாம். ஆளும் கட்சிக்கு எவர் தலையாட்டுகிற பொம்மையாக இருப்பாரோ அவர் ஜனாதிபதியாம். இதை போலவே அவல நிலை வேறு எந்த நாட்டிலும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கூடி உருவாக்கிய மத்திய அரசு நினைத்தால் மக்கள் ஒருமித்த உணர்வோடு வாக்களித்த மாநில அரசை கலைத்து விட முடிகிறது. வாக்காளரை அவமதிக்கிற இதுபோன்ற செயல் வேறு எங்கும் உண்டா? இது குடிமக்களின் வாக்குரிமையை அவமதிக்கிற செயல். இதையெல்லாம் விட வேதனை தாங்களுக்கு தேவையானவர்களை அவன் கொள்ளைக்காரனாக இருந்தாலும், கொலைக்காரனாக இருந்தாலும் சரி அவர்கள் நினைத்தால் இவர் ராஜ்யசபா எம்.பி. ஆகி விடுகிறார். அதனை வைத்து மத்திய அரசின் அமைச்சராகவும் ஆகிவிடுகிறார். இந்த மாதிரியான இழிநிலை வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது. இந்தியாவில் இருக்கிற ஒட்டுமொத்த ஜனநாயக மரபுகளும், தேர்தல் முறைகளும் மாற்றப்பட வேண்டும் இதை தான் வலியுறுத்துகிறது நாம் தமிழர் கட்சி.
திரைப்படத்துறை தேர்தலுக்கு பிறகு நோய்வாய்ப்பட்டதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறது. மது ஒழிப்பு முறையை நாங்கள் வலியுறுத்துவதில்லை. நாம் தமிழர் கட்சி மாற்றத்தை விரும்புகிற கட்சி. தமிழர்களுக்கு எதிரி சிங்களம் என்பது தற்போது கண்ணுக்கு தெரிந்தது. ஆனால் அதற்கு முன்பே எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல ஒன்று ஜாதி, இன்னொன்று மதம் இவை இரண்டும் தான் முக்கியமான எதிரி. இவைகள் களையப்பட்டு தமிழனாக ஒன்றுப்பட வேண்டும் என்பது முன்னோர்கள் நினைத்தது. அதை நாங்கள் செய்கிறோம். இது தான் நாம் தமிழர் கட்சியின் நோக்கம். இது புதிதாக தோன்றிய கட்சி அல்ல. ஆதித்தனார் ஐயா அவர்கள் இதை தோற்றுவித்தார், உருவாக்கினார். பின்னர் அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. காரணம் தமிழன் ஒன்றுப்படவில்லை. இப்போது நாங்கள் அதற்கு முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கனிமாறன், திருமேனி உதயம் உள்பட பலர் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.