எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, ஜூலை.16 - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அதிகார போதை தலைக்கேறிவிட்டது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- மும்பையில் சில தினங்களுக்கு முன்பு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது. ஆனால் பிற கட்சியினர் ஆறுதல் கூட சொல்லவில்லை. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் மக்களுக்காக பாடுபடும். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். நான் பெரியவனா? நீ பெரியவனா? என்பதற்கு இப்போது நேரமில்லை. இடமுமில்லை. சோனியாகாந்தியின் ஆசி இருந்தால் தான் ஹீரோ. இல்லாவிட்டால் ஜீரோ. புதுவையில் காங்கிரஸ் தான் பலமான கட்சி. நேற்று அடித்த காற்றில் சிலர் மேல சென்று விடலாம். ஆனால் அவர்கள் மீண்டும் கீழே வரலாம்.
புதுவையில் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது. 10 ஆண்டுகள் புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். மக்கள் தீர்ப்பை மதித்து காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியது.
ஆனால் இவர்கள் பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள். கடந்த 21/2 மாதத்தில் அதிகார போதை தலைக்கேறி செயல்பட்டு வருகிறார்கள். அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகின்றனர்.
ஏற்கனவே 5 ஆயிரம் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். தற்போது பாப்ஸ்கோவில் பணியாற்றிய 480 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இப்படி ஏன் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்? என்று விசாரித்தால் அவர்கள் தொகுயை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த செயலை செய்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. பணி நிரந்தரம் செய்வார்கள் என்று நம்பித்தான் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் அந்த மக்களை கண்ணீரில் அழ வைத்துள்ளனர். அந்த கண்ணீர் சும்மா விடாது.
மத்திய அரசின் திட்டமான 35 கிலோ திட்டத்தைதான் தங்களுடைய திட்டம் போல நிறைவேற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்து 3 மாத மாகியும் சிவப்பு மற்றும் மஞ்சள் ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. பென்சன் தொகை பெற்று வந்த 20 ஆயிரம் பேரை நீக்கிவிட்டு அதில் கிடைத்த நிதியின் மூலம் மற்றவர்களுக்கூ ரூ. 1000 பென்சன் வழங்கி உள்ளனர்.
டெல்லிக்கு சென்றால் தான் நிதி கிடைக்கும். சேலத்திற்கு சென்றால் நிதி கிடைக்காது. எப்போதும் நெற்றியில் விபூதி பட்டையிட்டாலும் நிதி வராது. முதல்வர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ரூ.50 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும். ஆனாலும் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.
சென்டாக் மாணவர்களுக்கு நிதி உதவி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த அரசு மைனாரிட்டி அரசு. சபாநாயகரை தவிர்த்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பலம் 14 ஆக உள்ளது. தராசு எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயலாம். காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி போராட வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசு இருப்பதால்தான் டெல்லிக்கு ரெயில் விடப்பட்டுள்ளது. கோவைக்கும், மும்பைக்கும் இடையே ரெயில் விடப்படும். சில பத்திரிக்கையாளர்கள் காங்கிரசார் குழப்பத்தில் இருப்பதாக எழுதுகிறார்கள். எங்களிடையே எந்த குழப்பமும் இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சோனியாகாந்தியின் விசுவாசிகள். நமது கூட்டணியில் தான் தி.மு.க. உள்ளது.
ஆனால் புதுவை தி.மு.க. நிர்வாகிகள் சிலர் மாற்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்த பிரணாப் முகர்ஜி கூட்டணி பலமாக உள்ளது என்று தெரிவித்தார். புதுவை தி.மு.க.வினருக்கு அவர்களது தலைவரே பதில் சொல்லி விட்டார். காங்கிரஸ் தோல்வியை கண்டு துவளாது. கட்சிக்குள் போராடினால் பலவீனமாகி விடுவோம். ஆட்சியின் தவறுகளை எதிர்த்து போராட வேண்டும். அப்போது தான் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் பழக்கம் இல்லை. ஒற்றுமையாக இருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும். தொண்டர்களுக்க மனக்குறைகள் இருந்தால் கட்சி தலைவரையோ, என்னையோ, மாநில பொறுப்பாளரையோ, அகில இந்திய தலைவரையோ சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஒற்றுமையாக இருந்து கட்சியை பலப்படுத்துவோம் என்று காமராஜர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம். காமராஜர், ராகுல், சோனியா ஆகியோரின் பிறந்த நாளை முப்பெரும் விழாவாக கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தல் திறக்கலாம் : தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனுமதி
01 May 2024சென்னை : 'அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை; ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்' என தமிழக தலை
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான் : ஆலங்குடி, குருவித்துறையில் சிறப்பு வழிபாடு
01 May 2024திருவாரூர் : மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.19 மணிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசாரம் செய்ய தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு
01 May 2024ஐதராபாத் : தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.