எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டவுன்ட்டன், ஜூலை 17 - இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் சோமர்செட் அணி அதிரடியாக ரன்களை குவித்தது. விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பவுலர்கள் திணறுகிறார்கள்.இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஸ்ட்ராஸ் தலைமையிலான அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் 1 டுவெண்டி -20 போட்டி, 4 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றது. டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடர் பெரும் சவாலாக இருக்கும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்தின் கவுன்டி அணியான சோமர்செட் அணிக்கு எதிராக 3 நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு கவுதம் காம்பீர் தலைமை வகித்தார். சோமர்செட் அணிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமை வகிக்கிறார். டாஸ் வென்ற சோமர்செட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஸ்ட்ராஸ் மற்றும் அருள் சுப்பையா ஆகியோர் களமிறங்கினர். அருள் சுப்பையா மலேசிய தமிழர். இவர் மலேசிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக கடந்த 1999 முதல் விளையாடி வருகிறார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டுமுதல் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார். அருள் சுப்பையா ஒரு ஆல்ரவுண்டர் குறிப்பிடத்தக்கது.
ஸ்ட்ராஸ், சுப்பையா இருவரும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக ஸ்ட்ராஸ் அதிரடியாக விளையாடினார். அருள் சுப்பையா துவக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் இணைந்து சோமர்செட் அணியின் ஸ்கோரை 101 க்கு உயர்த்தியபோது 78 ரன்களை எடுத்திருந்த ஸ்ட்ராஸ், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித்மிஸ்ராவின் பந்தில் கீப்பர் சாகாவினால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக காம்ப்டன் களமிறங்கினார். இதன்பிறகு சுப்பையாவும், காம்ப்டனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். காம்ப்டன் 74 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். அருள்சுப்பையா 179 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். அணியின் எண்ணிக்கை 324 க்கு உயர்ந்தபோது காம்ப்டன், பார்ட்டைம் பவுலர் சுரேஷ் ரெய்னாவின் பந்துவீச்சில் யுவராஜ் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 88. இதையடுத்து சோமர்செட் அணியின் ஜோன்ஸ் களமிறங்கினார். இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சோமர்செட் அணி 76.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 ரன்களை குவித்தது. அந்த அணியின் அருள்சுப்பையா ஆட்டமிழக்காமல் 222 பந்துகளில் 145 ரன்களை குவித்துள்ளார். மேலும் ஜோன்ஸ் 1 ரன் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய தரப்பில் அமித்மிஸ்ரா, சுரேஷ் ரெய்னா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே வருகிற 21 ம் தேதி முதலாவது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் சோமர்செட் அணிக்கு எதிரான இந்திய அணியின் பந்துவீச்சு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக ஜாஹீர்கான் போன்ற அனுபவ பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த முடியாதது ஆச்சரியமான விஷயம். முனாப் பட்டேல் சிக்கனமாக பந்துவீசினாலும் அவராலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. பந்துவீச்சில் இந்திய அணி முழுக் கவனம் செலுத்தினால் மட்டுமே வலுவான இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சாதிக்க முடியும்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் என்று ஆரூடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் வாகனும் இங்கிலாந்து அணி வலுவான அணி என்று குறிப்பிட்டுள்ளதோடு, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ட்ரெம்லெட், ஆன்டர்சன் ஆகியோர் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.