முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் மழைக்கு 320 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

பாங்காக், அக். - 24 - தாய்லாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் 320 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் 3 ல் ஒரு பகுதி வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.  தாய்லாந்து நாட்டில் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் வடக்கு, வட கிழக்கு மத்திய பகுதிகளில் உள்ள மாகாணங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிகப் பெரிய தொழிற்பேட்டை முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த மழைக்கு 320 பேர் பலியாகி உள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்கும் மக்கள் ஆளாகி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்