முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி - திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட-ஜெயலலிதா உத்தரவு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 10 - ஒரு லட்சத்து 3533 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக 10.12.11 முதல் தண்ணீர் திறந்துவிட நான் உத்தரவிட்டுள்ளேன். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கப் பாசன அமைப்பின்கீழ் உள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண்  பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களிலுள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாயிலிருந்து இடைவெளிவிட்டு பாசனத்திற்காக 10.12.11 முதல் தண்ணீர் திறந்துவிட நான் உத்தரவிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்