முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் கைவிட காங்கிரஸ் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. - 26 - தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் நலனை மையமாக கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழக நலன்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமிழகத்தின் நிலையை எடுத்து கூறியிருக்கிறார்கள். பிரதமரும் நமது நிலையை உணர்ந்து பிரச்சினையை தீர்க்க தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த சூழலில் சென்னை வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் அதனை கைவிட வேண்டும் என ஞானதேசிகன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்