எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.27 - எல்லோருக்கும் உயர்கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக வி.ஐ.டி. நாட்டிலேயே முதன்முறையாக ஒரு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு அங்கமாக உயர்கல்வி செல்ல முடியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்கு முன்னாள் மாணவர்கள் உதவவேண்டும் என ஜி.விசுவநாதன் பேசினார். வி.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் இதன் 17வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து ஏறக்குறைய 2,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவுக்கு தலைமை தாங்கிய வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், சிறந்த சமூக பணிக்கான விருதை பாலாஜி நந்தகுமாருக்கும்(அரியூர் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர்), கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் சாதனை படைத்ததற்காக பி.ரோஸ் கவிதாவுக்கும், தொழில்முனைவோர்களை உருவாக்கும் பணியில் சாதனை படைத்ததற்காக ஜெரோம் ஜோசப் ராஜிக்கும், நிறுவனங்களை கையாளுவதில் சாதனை படைத்ததற்காக எம்.பி.சிட்டிபாபுவுக்கும் விருதுகளை வழங்கி தலைமையுரையாற்றியபோது கூறியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. உலக நாடுகள் பலவற்றை காணும்போது, நமது நாடு கல்வி வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது. 600 பல்கலைக்கழகங்களும், 13,000 கல்லூரிகளும் மட்டுமே உள்ளன. இதில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே உள்ளது. நம் நாட்டின் ஜனத் தொகைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் ஏற்பட வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அமர்த்துகின்றனர். அதனை பெறுவதற்கு நமது மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்கவேண்டும். இதற்கு உயர்கல்வி படித்தவர்கள் வாரம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு கல்லூரிக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். வி.ஐ.டி. மாணவர்கள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் புதிய பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்டு அனைத்தும் உலக மயமாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ளவர்கள் அயல் நாடுகளுக்கும், அயல் நாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிற்கும் உயர்கல்வி கற்க வசதி ஏற்பட்டுள்ளது.
சீர்திருத்தம் என்ற பெயரில் கல்விக்கு கட்டுப்பாடு கூடாது என என் தலைமையிலான இந்திய கல்வி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் அரசுக்கு யோசனை கூறப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஒரு சில பல்கலைக்கழகங்கள் தான் அப்படி செயல்படுகின்றன.
எல்லோருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் உயர்கல்வி என்ற ஒரு திட்டத்தினை நாட்டில் முதன்முதலாக வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. உயர்கல்வி செல்ல முடியாதவர்களை கண்டு அவர்களுக்கு தேவையான நிதி வசதி உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும். இதற்கு வி.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.விசுவதான் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை பன்னாரி அம்மன் குரூப் நிறுவனங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சங்க எதிர்கால பணிகளுக்கான திட்டங்களை துவங்கிவைத்து பேசியதாவது:
இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் பணிகளை திறமையாக மேற்கொண்டு , புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
வி.ஐ.டி.யில் பயின்று உலக அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வி.ஐ.டி.யில் சந்தித்து வசதி இல்லாத மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுண்ஐயாக இருப்பது வரவேற்கத்தக்கது.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்உத செல்பவர்கள் அந்தந்த பகுதிகளில் என்ன தொழில் தொடங்க முடியுமோ அதனை ஆராய்ந்து அன்த தொழிலில் ஈடுபடவேண்உடம். அதன் மூலம் தொழில் வளர்ச்சி பெருகி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு அளிப்பவர்களாக நீங்கள் மாறுவீர்கள்.
இவ்வாறு எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பேசினார்.
மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகைகளை வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.சம்பத் வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் எம்.பி. இரா.செழியன், காக்னிசன்ட் நிறுவன பிரதிநிதி ராகுல்சிங், வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், விட்டா நிர்வாகிகள் டி.வெங்கடேஷ், ஜி.பாலாஜி, அஸ்லாம் ஷெரீப், எஸ்.அஜய், பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் துவக்கத்தில் விட்டா பொது செயலாளர் சுதா ராஜகோபாலன் வரவேற்றார். முடிவில் விட்டா பெங்களூரு கிளை தலைவர் சங்கர் கோகுலே நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.