முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து: பெட்டிங் கட்டிய தொழிலதிபர் கொலை

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 28 - உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை வைத்து இந்தியாவில் மிகப் பெரிய பெட்டிங் கட்டப்பட்டு வருகிறது. டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் தருண் பஜாஜ் என்பவர் தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில் அவர் உலக கோப்பை கால்பந்து போட்டி குறித்து பெட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது.

சூதாட்ட பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பணம் பாக்கி வைத்து இருந்ததால் இவர் மாஸ்டர் புக்கி எனப்படும் பெரிய சூதாட்ட தரகர்களால் ஆள் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது இவரால் ஏமாற்றப்பட்டவர் கொன்று இருக்கலாம். கொல்லப்பட்ட தருண் பஜாஜ், ராஜேந்தர் நகர் பகுதியில் வைத்து பெட்டிங் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக 12 சூதாட்ட தரகர்களை போலீசார் இதுவரை விசாரித்து உள்ளனர். இதில் 3 சூதாட்ட தரகர்கள் ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய தரகர்கள் ஆவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்