முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரணப் பணிகளில் தாமதமா? தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நிவாரணப் பணிகளில் தாமதம் என்பது குறித்து தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நிருபர்கள்  சந்திப்பில் கூறியதாவது:கஜா புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில் 2,49,083 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளில் இரவு, பகலாக அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் தகவல் அளியுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து