முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதி குறித்து உ.பி. பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ கருத்தால் சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ, உத்தரபிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங், மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வைச்சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங், மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ, சுயமரியாதை பற்றி மாயாவதிக்கு ஒன்றும் தெரியாது. மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்து விட்டார், இப்போது தனது சுயமரியாதையையும் அதிகாரத்துக்காக விற்கத் துணிந்து விட்டார். மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை என்று பேசினார்.  பா.ஜ.க பெண் எம்.எல்.ஏவின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து