முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்கும் படி உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டிடிவி தினகரனின்  அ.ம.மு.க. கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்ததுள்ளது.

அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது, பதில் அளித்த தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் அ.ம.மு.க அங்கீரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தர சின்னமாக ஒதுக்க முடியாது என கூறியது. எனவே, குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்தது. இதையடுத்து டிடிவி தினகரன், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டும் மறுத்து விட்டது. மேலும் குக்கர் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து