முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே போலீஸ் சார்பில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் விநியோகம்:

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை தடுத்திடும் வகையில் ரயில்வே போலீசார் சார்பில் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருமங்கலம் மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி அவர்களுடைய உடமைகளை திருடிச் செல்லும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனை கட்டுப்படுத்தி ரயில் பயணிகளுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு கொடுத்திடும் வகையில் ரயில்வே போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில்,விருதுநகர் ரயில்வே காவல் ஆய்வாளர் குருசாமி தலைமையில் ஏராளமான போலீசார் ஒலி பெருக்கி மூலமாக குற்ற சம்பவங்களை தடுத்திடும் வழிகளை சொல்லியும், சிறப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.குறிப்பாக விலையுயர்ந்த உடமைகளை பொது இடங்களில் வைத்துவிட்டு செல்லக்கூடாது,அடையாளம் தெரியாத நபர்கள் அழைத்தால் செல்லக்கூடாது என்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.ரயில்வே போலீசாரின் இந்த புதுமையான முயற்சிக்கு ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து