முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி - 3 - வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

பாசெல் : உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3 - வது சுற்றுக்கு முன்னேறினார்.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாய் பூ போவை (சீனதைபே) சந்தித்தார். 43 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பி.வி.சிந்து அடுத்து பீவென் ஜாங்கை (அமெரிக்கா) எதிர்கொள்கிறார். முன்னதாக, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஜப்பானின் அகானே யமாகுச்சி 14-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து