முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங்க சட்டசபை இடைத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சோனியா காந்தி ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42-ல் 18 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றது. மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதால் 2021-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்கத் தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, 2 தொகுதிகளில் காங்கிரசும், ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் போட்டியிடும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கூறும் போது, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன். இடது சாரிகள் ஒப்புக்கொண்டால் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட லாம் என அவர் தெரிவித்தார் என்றார்.

பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரசும், இடதுசாரிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து