முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 30 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.29,528-க்கு விற்பனை

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூ. 72 உயர்ந்து ரூ. 29,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 9 உயர்ந்து ரூ. 3,691க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 40 காசு குறைந்து ரூ.51.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை அதிகரித்து வந்தது. அதன் பிறகு விலை ஏறுவதும், குறைவதுமான போக்கு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ.3,682-க்கும், சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 29,456-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், திடீரென தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அளவுக்கு குறைந்திருப்பது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், இந்த விலை குறைவு தற்காலிகமானதுதான். பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வது என்பது அதிகரித்து வருகிறது. இதனால், வரும் நாட்களில் தங்கம் விலை உயரத் தான் வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து நகை வாங்குவோர் சற்று நிம்மதியாக இருந்த நிலையில் நேற்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து