முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தனது சொந்த ஊரில் இன்று வாக்களிக்கிறார்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம்  : சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சேலம் காமலாபுரத்திற்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கார் மூலம் தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்துகிறார்.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, ஓமலூர், நங்கவள்ளி, மேச்சேரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம், வீரபாண்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், ஏற்காடு, காடையாம்பட்டி, சங்ககிரி ஆகிய 12 ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக இன்று  (27-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை வாக்களிக்கிறார். இதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சேலம் காமலாபுரத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் எடப்பாடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்துகிறார். பின்னர் முதல்வர் அங்கிருந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வந்து தங்குகிறார். நாளை  காலை சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்கிறார். இதையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் தலைமையில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியிலும், முதல்வர் செல்லும் சாலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து