முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 36,400 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு : மத்திய அரசு விடுவித்தது

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36,400 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 

கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக மாநில அரசுகள், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2020-ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான 3 மாதங்களுக்கு ரூ.36,400 கோடியை ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

பொது முடக்கத்தால் வருவாய் இழப்பை சந்தித்துள்ள மாநில அரசுகளின் செலவீனங்களை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு முதல் 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என்று மத்திய அரசு கூறி இருந்தது. 

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 96 கோடி ரூபாயை ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து