முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகலாந்தில் வரும் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கோஹிமா : கொரோனா அதிகமாக பரவி வருவதால் நாகலாந்தில் ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயம், அத்தியாவசிய தேவை, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, கார், ஆட்டோ ஓட அனுமதி என சில தளர்வுகள் நீடிக்கும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

நாகலாந்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 18 ராணுவ வீரர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா உறுதியானது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 434 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா அதிகமாக பரவி வருவதால் நாகலாந்தில் ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விவசாயம், அத்தியாவசிய தேவை, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, கார், ஆட்டோ ஓட அனுமதி என சில தளர்வுகள் நீடிக்கும் என்று அரசு கூறியுள்ளது. இருப்பினும் வெளிமாநிலத்தவரால் நோய் பரவுவதை தடுக்க அண்டை மாநிலங்களான அசாம், மணிப்பூர் மற்றும் அருணாசலப்பிரதேச எல்லைகள் மூடப்படும் என்றும், அங்கு பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் அதிகாரிகள், அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவின்படி, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து