முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

98 உதவி ஆய்வர்களுக்கு பணி நியமன ஆணை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  மூலம் தெரிவு  செய்யப்பட்ட 98 உதவி ஆய்வர்களுக்கு பணி  நியமன ஆணைகள் வழங்குவதற்கான தொடக்கமாக   10  உதவி ஆய்வர்களுக்கான பணி  நியமன ஆணைகளை சென்னை பெருநகர வளர்ச்சிக்  குழும அலுவலகத்தில் நேற்று  (15.07.2020 ) நடைபெற்ற  நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வழங்கினார்.

அம்மாவின்  அரசு நிதித் துறையின் கீழ் செயல்பட்டு  வரும்  உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் மாநில அரசு தணிக்கைத் துறைக்கு  பல்வேறு திட்டங்களைத் தீட்டி  தணிக்கை பணிகளைச் செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  மூலம் தெரிவு  செய்யப்பட்ட 98 உதவி ஆய்வர்களுக்கு பணி  நியமன ஆணைகள் வழங்குவதற்கான தொடக்கமாக   10  உதவி ஆய்வர்களுக்கான பணி  நியமன ஆணைகளை சென்னை பெருநகர வளர்ச்சிக்  குழும அலுவலகத்தில் நேற்று  (15.07.2020 ) நடைபெற்ற  நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வழங்கினார். 

இந்நிகழ்வில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன்உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை இயக்குநர் வேல்சாமி, மாநில அரசு தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல்சலாம் மற்றும் உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து