முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடியின் தாயார் மரணம்: துணை முதல்வர் ஓ. பி.எஸ். இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் அன்பு தாயார் தவுசாயம்மாள் தனது 93-வது வயதில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் நேற்று முன்தினம் நள்ளிரவில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன். 

பெற்றெடுத்து பேணி வளர்த்து சான்றோனாய் உயர செய்த அன்பு தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு சகோதரர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை.

தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும்? பாசமிகு தாயார் தவுசாயம்மாளை பிரிந்து வாடும் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும், குடும்ப நண்பர்களுக்கும் எனது சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த தாயார் தவுசாயம்மாளின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அன்னை தவுசாயம்மாளின் நினைவுகளை போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து