முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் விபத்து: 8 பேர் பலி

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர் : டிரக் – ஜீப் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் நள்ளிரவு 12.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது. ஜீப்பில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான 2 வண்டிகளின் டிரைவர்களும் தப்பி ஓடிவிட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து முதல்வர் அசோக் கொலட் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய ஆண்டவனை பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

பலியானவர்கள் அனைவரும் மத்திய பிரதேசம், ராஜ்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

வட மாநிலங்களில் தற்போது பனிமூட்டம் அதிகமாக இருக்கிறது. விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து