முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த சூழலில் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் வரும் 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் எனது பொது பேரணிகளை நிறுத்தி வைக்கிறேன். 

தற்போதைய சூழ்நிலையில் பெரிய பொது பேரணிகளை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆழமாக சிந்திக்க அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன் என்று ராகுல் காந்தி அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து