முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள தேர்தலில் அவர் பிஸியாக இருக்கிறார் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மகராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா தாக்கமும் நோயாளிகள் எண்ணிக்கையும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகராஷ்டிராவில் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.  இந்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்கு வங்காள தேர்தலில் அவர் பிஸியாக இருக்கிறார் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி ஆக்சிஜன் கொண்டு வந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன்.

ஆனால் அவர் மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனினும் கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கிறது  என்று உத்தவ் தாக்கரே கூறினார். 

மேலும், மகராஷ்டிராவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆக்சிஜனையும் மருத்துவ பயன்பாட்டுக்கு திருப்பி விட்ட போதும் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எந்த அளவு அதிகரிக்கும் என கணிக்க முடியாது. எனவே இங்கு 3-வது அலை ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும் என்பதால் தொழில் நிறுவனங்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து