முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100-வது நாளை எட்டியது தடுப்பூசி திட்டம்: இந்தியாவில் இதுவரை 14 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு நேற்றுடன் 100-வது நாள் ஆகிறது. இதுவரை 14 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகில் சில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்த அதே நேரத்தில் இந்தியாவும் தடுப்பூசியை உருவாக்கியது. இதை பல கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. 

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதலாவதாக சுகாதார ஊழியர்களுக்கும், 2-வதாக முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.  அதன் பிறகு மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட இருக்கிறது.  இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு நேற்றுடன் 100-வது நாள் ஆகிறது. இதுவரை 14 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

உலகிலேயே இத்தனை பேருக்கு மிக விரைவாக ஊசி போட்டதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போடுவதால் விரைவில் பல கோடி பேருக்கு ஊசி போடப்படும்.  இதற்காக தடுப்பூசி முகாம்களும் நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து