முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் பரிதாப பலி

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.12 - பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் நெருக்கமிகுந்த ஒரு மார்க்கெட்டில் நேற்று சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் ஆறுபேர் கொல்லப்பட்டார்கள். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஹஜன்சாய் பஜாரில் நடந்தது. ஒரு வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு நேற்று வெடித்து சிதறியதில் ஆறு பேர் பலியானதாக பாகிஸ்தான் வானொலி தெரிவித்தது. இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்