முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லகிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சர் பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

லகிம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லகிம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக மத்திய உள்துறை இணை மந்திரி  அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் லகிம்பூர் வன்முறையால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அதன் தொடர்ச்சியாக நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ‘நான் சந்தித்து ஆறுதல் கூறிய பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் நீதி வேண்டும் என்று முறையிட்டு உள்ளனர்.  எதிர்க்கட்சி தலைவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தான் காவல்துறை பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர  குற்றவாளிகளை கைது செய்வதற்காக பயன்படுத்தப்படவில்லை’ என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

 

மேலும், ‘சம்பவத்தை நேரில் பார்த்த அனைவரும் மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் அங்கு நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இதனால், விசாரணை நேர்மையாக நடைபெற மந்திரி தனது பதவியில் இருந்து விலக வேண்டும்’ என்று கூறியுள்ளார். முன்னதாக  உத்தரபிரதேசத்தில் அமைதியை சீர்குலைத்ததாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து