எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.1 - குடகுவிட்டுக் குதித்து வரும் காவிரியை அடகுவைத்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை சரி செய்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார். அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-
சென்னை, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-
அரசியலில் நான் அடியெடுத்து வைத்து முப்பது வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், அந்த முப்பது வருடங்களில் இருபத்தைந்து வருடங்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்று கழகத்தை வழி நடத்தி வருகிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது.
என்னுடைய அரசியல் பயணத்தில், பல்வேறு இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும், சோதனைகளையும் நான் சந்தித்த போது, எனக்கு உறுதுணையாக இருந்து நீங்கள் காட்டி வரும் பாசத்திற்கும், பரிவிற்கும், அன்பிற்கும், எனது நன்றியைத் தெரிவித்து, இந்தத் தருணத்தில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டுவரும் இந்த 25 ஆண்டு காலத்தில் கழகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, உண்மையிலேயே வியப்பாகத் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்னை கழக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்த போது, நான் தினந்தோறும் தலைமைக்கழகம் செல்லுவேன். உங்களுக்கு எல்லாம் தெரியும். அப்போது கழகத்தின் வங்கிக் கணக்கில் ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கூட இல்லை. ஆனால், இன்று நம்முடைய தலைமைக் கழகக் கணக்கில் வைப்பு நிதி மற்றும் 118 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 530 ரூபாய் அளவிற்கு இருக்கிறது என்று சொன்னால், இது வளர்ச்சி இல்லை என்றால் வேறு எது தான் வளர்ச்சியாக இருக்க முடியும்? அதுமட்டுமல்ல, 1986ஆம் ஆண்டு அப்போது எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது தலைமைக் கழகத்தில் அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் புதிய உறுப்பினர் கார்டு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அந்தப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அன்றைய தினம் கழகத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 லட்சம். ஆனால் இன்று உண்மையாகவே கழகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சம் ஆகும். இத்தயை ஒரு வளர்ச்சியை வேறு எந்த அரசியல் இயக்கமும் இந்தியாவிலேயே கண்டிருக்க முடியாது என்பதை நான் திட்டவட்டமாகச் சொல்லுவேன்.
ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கி சீரழிக்கப்பட்ட தமிழகத்தை, தமிழக மக்களின் துணை கொண்டு மீட்டோம். அப்படி மீட்ட தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாய் மாற்ற வேண்டும் என்கிற முனைப்போடு இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு நம் பயணத்தை நாம் வெற்றிகரமாகத் தொடர்கிறோம். ஆனால், அதற்கு சவால் விடுக்கின்ற விதத்திலே எத்தனையோ தடைகள் நம் முன்னே எதிர் வந்து நிற்கின்றன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஒரு புறம் ஐந்தாண்டு கால மைனாரிட்டி திமுக ஆட்சியால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தை செப்பனிடும் பணிகளை மேற்கொண்டு வருவது; மறு புறம் வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்ல சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு கடமையாற்றுவது என; எனது தலைமையிலான கழக அரசு போராடி வருகிறது. அதே வேளையில், மத்தியில் ஆளும் கருணாநிதி முட்டுக் கொடுத்து தாங்குகின்ற மத்திய அரசு, எத்தனை வகைகளில் முட்டுக்கட்டை போடுகிறது என்பதை நீங்களும் அறிவீர்கள்.
காவேரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை, கச்சத் தீவு விவகாரம்; தமிழகத்திற்கான அரிசி, மண்ணெண்ணெய், எரிவாயு, கூடுதல் நிதி போன்ற அனைத்து கோரிக்கைகளிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், தமிழக மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகின்ற முனைப்பில் நாம் வெகுவான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
பேரறிஞர் அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும், என்னையும், அரசியல் உலகத்திற்கு அளித்திட்ட கலை உலகத்தைக் காத்தது உங்கள் அன்புச் சகோதரி தலைமையிலான கழக ஆட்சி தான். இப்படி, வெள்ளித் திரையை மீட்ட நாம், கருணாநிதியின் குடும்பக் கொள்ளையில் இருந்து தமிழக மக்களைக் காக்க அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து; அதன் வழியே தமிழக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேனல்களை வழங்கி வருவதைப் போலவே; சென்னை மாநகருக்கும் வழங்குவதற்கு முயற்சிக்கும் நிலையில், தங்களது குடும்ப நிறுவனங்களின் மூலம் தங்களது ஏகோபித்த உரிமையை நிலை நிறுத்திட, மத்திய காங்கிரஸ் அரசைக் கொண்டு முட்டுக்கட்டைப் போடுவதையும்; அதனை உடைத்தெறிய உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் போராடி வருவதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதனை மத்திய அரசு, மத்திய அரசிதழில் வெளியிட முன்வராத சூழ்நிலையில், ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் இதை வெளியிட, தான் தாங்கி இருக்கும் மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தாத சூழ்நிலையில்; இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதே காவேரியில் நமக்குரிய பங்கை உறுதி செய்யும் என்பதால், நான் அது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். எனினும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், எனது ஆணையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதன் மூலம், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் தடுக்கும் நோக்கில் மறைமுக வேலைகளை செய்து வருகிறார் கருணாநிதி.
இருப்பினும், குடகு விட்டு குதித்து வரும் காவேரியை அடகு வைத்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை நான் நிச்சயம் சரி செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வாக்களித்த மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை இம்மியும் குறையாமல் நிறைவேற்றும் விதமாக மாணவச் செல்வங்களுக்கு மடிக் கணினி; இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், ஃபேன்; வறுமையின் பிடியில் ஆட்பட்டுக் கிடக்கும் ஏழைஎளிய பாமர மக்களை மீட்டெடுக்கும் விதமாக கறவை மாடு, ஆடுகள் என பின்தங்கிக் கிடக்கும் மக்களின் பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை, மீட்டெடுக்கும் வகையிலான மீட்சி நடவடிக்கைகளாக இந்தத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
விலையில்லா அரிசி; தாலிக்கு தங்கம்; மீன்பிடி தடைக்கால உதவித் தொகை இரட்டிப்பு; முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை இரட்டிப்பு என
ஒரு கனிவுள்ள அரசாங்கமாக, எளியோரின் பாதுகாவலராக நம் கழக அரசு திகழ்ந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமும்; தமிழ் நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவும்; லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறோம். அதுவும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் போல் அல்லாமல் முறையாக தகுதித் தேர்வுகளை முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படையாக நடத்தி, இளைஞர்களின் வாழ்வில் விளக்கேற்றி இருக்கிறோம்.
மேலும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட அனைத்து வகைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரே நாளில் பிரபலமான
12 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட புரட்சிகளையும் செய்திருக்கிறோம். ஆக, அடித்தட்டு மக்களுக்கு பொருளாதார உதவிகளும்; வறுமையைப் போக்கும் திட்டங்களும் ஒரு புறம் என்றால்; அதே வேளையில், பள்ளிக் கல்வித் துறைக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு நிதியாண்டிற்கு மட்டுமே 14,553 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கல்லாமையை நீக்குகிற அரசாக; அறிவொளியை ஏற்றி வைக்கிற அரசாக; உங்கள் அன்புச் சகோதரியின் அரசு திகழ்கிறது என்பதிலும் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்.
ஆக, கல்லாமை நீக்கி; இல்லாமை போக்கி; இவை இரண்டோடு வேலை இல்லாமையையும் அடியோடு அகற்றி; தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து வந்து இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய் மாற்றுவதற்கு உழைத்து வரும் கழக அரசின் சாதனைகளை தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.
அது போலவே, கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி சீரழித்த ஆவினை, அடியோடு மீட்டுவிட்டோம். போக்குவரத்துத் துறையை பொறுப்போடு மீட்டிருக்கிறோம். அதனால் இன்று புதுப் புது பேருந்துகள் தமிழகமெங்கும் வலம் வந்து மக்களுக்கு மகிழ்வைத் தருகின்றன.
இவ்வளவு சாதனைகளை நாம் நிகழ்த்தி இருந்தாலும், தமிழ் நாட்டு மக்களை பாதிப்படையச் செய்துள்ள பிரச்சனை மின் பற்றாக்குறை என்பதை நான் அறிவேன். முந்தைய மைனாரிட்டி திமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட மின் பற்றாக்குறையினை நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் நான் எடுத்து வருகிறேன். மிக விரைவில் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை சீர் செய்யப்படும். எனது முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலவே தமிழகத்தை, மிகை மின் உற்பத்தி மாநிலமாய் விரைவில் மாற்றிக் காட்டுவேன். 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
இந்தப் பிரச்சனையைப் பற்றி கழக உடன்பிறப்புகள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, மக்கள் மத்தியில் பேசுகின்ற போது, எளிமையான ஒரு கருத்தை எளிதில் புரியக் கூடிய ஒரு கருத்தை அனைவரும் அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று கடுமையான மின்பற்றாக்குறை தமிழகத்தில் நிலவுகின்றது. இதற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் காரணம்? 2006ல் முதலமைச்சர் பதவியை விட்டு நான் செல்லுகின்ற போது தமிழ் நாடு மின்சார உற்பத்தில் உபரி மாநிலமாக இருந்தது, மின் மிகை மாநிலமாக இருந்தது. மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 2011ஆம் ஆண்டில் மீண்டும் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது பார்த்தால் தமிழ் நாடு மின் குறை மாநிலமாக இருந்தது. ஆகவே, இதற்கு நாம் எப்படி காரணமாக இருக்க முடியும்? என்னுடைய அரசு எப்படி காரணமாக இருக்க முடியும்? இடையில் இருந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டது யார்? கருணநிதி அல்லவா, திமுக மைனாரிட்டி ஆட்சி அல்லவா? ஆகவே, இன்று நிலவும் இந்தக் கடுமையான மின்பற்றாக்குறை நிலைமைக்கு முழு பொறுப்பு, முழு காரணம் திமுக அரசு தான், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தான் என்பதை அனைவரும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.