முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை: பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
PTR-2022 11 24

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.  மாநிலத்தின் நிதிநிலைமை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

முதல்வரின் புரட்சிகரமான உரிமைத் தொகை திட்டத்தின் செயல்முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் EAC குழுவுடன்  நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. போலிச் செ‌ய்‌திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக்கும் சமூகநீதி இலக்கில் இருந்து திசை திருப்ப முடியாது என்று  அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து