முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிருக்கான உரிமைத் தொகை வரும் ஆண்டில் வழங்கப்படும்: சபாநாயகர் அப்பாவு பேச்சு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      தமிழகம்
Appavu 2022-10-02

வரும் ஆண்டில் மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டினை சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். 

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழ்நாட்டின் வருவாய் பெருக்கி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவார்.  அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி,

நல்ல இளைஞர்களை, மாணவர்களை உருவாக்குகிற ஆற்றல் தொடக்க கல்வி ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது. ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை சொல்லி கொடுக்க வேண்டும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து