எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை போலந்தின் ஜான் ஜீலின்ஸ்கி - மொனோக்காவின் ஹ்யூகோ நிஸ் இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய போபண்ணா இணை 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஜான் ஜீலின்ஸ்கி - ஹ்யூகோ நிஸ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. போபண்ணா இணை நாளை நடைபெறும் காலிறுதியில் நெதர்லாந்தின் செம் வெர்பீக் - ஆஸ்திரேலியாவின் ஜான் பேட்ரிக் ஸ்மித் இணையை எதிர்கொள்கிறது.
___________________________________________________________
டிக்கெட் விலை ரூ.55 ஆயிரம்
ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒவ்வொரு நகரங்களில் வெவ்வேறு விலைகளில் விற்பனையாகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தான் ஐ.பி.எல். டிக்கெட்டுகளின் விலையை அதிக பட்சத்துக்கு விற்பனை செய்தது. பெங்களூரு- பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்துக்கு அதிகபட்ச டிக்கெட் விலையாக ரூ.55,055 விற்பனையானது. இந்த டிக்கெட் பகுதி அதிநவீன வசதிகளுடன் கொண்டது. எல்லா விதமான உணவு பொருட்களும் இந்த டிக்கெட் பாக்சில் கிடைக்கும். இதே டிக்கெட் ரூ.42,300 ஆக உள்ளது. டைனமிக் விலையில் ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனையானது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.2,300 ஆகும். டைனமிக் விலையில் ரூ.5,200 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் லக்னோ அணி நிர்வாகம் மிக குறைந்த பட்ச விலையில் டிக்கெட்டுகளை விற்கிறது.
பஞ்சாப்புக்கு எதிராக வருகிற 30-ந் தேதி நடைபெறும் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.399 ஆகும். அதிக பட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கு விற்கிறது. ராஜஸ்தான் அணியின் குறைந்தபட்ச விலை ரூ.1,200, அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் (டெல்லிக்கு எதிரான போட்டி) , மும்பை அணி ரூ.990- ரூ.15 ஆயிரம், (ராஜஸ்தான்), ஐதராபாத் அணி ரூ.750-ரூ.30 ஆயிரம், (சென்னை), குஜராத் அணி ரூ.499- ரூ.12 ஆயிரம், (ஐதராபாத்), டெல்லி அணி ரூ.2 ஆயிரம்- ரூ.5 ஆயிரம் (கொல்கத்தா), விலைகளில் டிக்கெட்டை நிர்ணயித்துள்ளது. குஜராத்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700, அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் ஆகும்.
___________________________________________________________
அணிக்கு திரும்பிய ஆல் ரவுண்டர்
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 30ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார். இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், ஷகிப் அல் ஹசன், ஷஹாதத் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், கலீத் அஹ்மத், நஹித் ராணா, ஹசன் மஹ்முத்.
___________________________________________________________
இம்பேக்ட் விதி: பிளமிங் கருத்து
குஜராத்துடன் மோதும் ஆட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீ பன் பிளமிங் கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது. ஒரு வீரர் 75 ரன்னை எடுக்கும் போது அணிக்கு உதவியாக இருக்கும். ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும். தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்தும் விதி அணியின் பேட்டிங்கை மேம்படுத்த உதவியது. அதை நாம் செயல்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
___________________________________________________________
விளம்பரப்படுத்த என் பெயர்: கோலி
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கெதிராக 49 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 77 ரன்கள் விளாசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அத்துடன் 50 ரன்களுக்கு மேல் 100 முறை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். போட்டி முடிந்த பின் விராட் கோலி பேசும்போது கூறியதாவது., டி20 கிரிக்கெட் என வரும்போது உலகின் பல்வேறு இடங்களில் போட்டியை விளம்பரப்படுத்துவற்கு என்னுடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும். நான் இன்னும் அதை பெற்றுள்ளேன் என யூகிக்கிறேன்.
நான் ஆரஞ்ச் தொப்பியை எதிர்பார்த்து விளையாடவில்லை. இந்த உறுதியை என்னால் உறுதியாக கொடுக்க முடியும். என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். நான் அணிக்கு அட்டகாசமான அதிரடி தொடக்கம் கொடுக்க முயற்சி செய்தேன். விக்கெட் வீழ்ந்தால் அதற்கு ஏற்ப மதிப்பீடு செய்ய வேண்டும். இது வழக்கமான பிளாட் பிட்ச் அல்ல. போட்டியை முடித்துக் கொடுக்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. பந்து அடிக்கக்கூடிய ஸ்லாட்டில் விழுந்தது. ஆனால், டீப் பாய்ன்ட் பகுதிக்கு சென்று விட்டது.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை1 day 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்5 days 1 min ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தனது மருமகனை நீக்கினார் மாயாவதி
08 May 2024லக்னோ, ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், "அவர் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை" கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொற
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
மும்பையில் அதிர்ச்சி சம்பவம்: சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர் பலி
08 May 2024மும்பை : மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2024.
09 May 2024 -
உயிரிழந்தது ஜெயக்குமார்தானா? - டி.என்.ஏ. பரிசோதனைக்கு எலும்புகள் அனுப்பிவைப்பு
08 May 2024நெல்லை : ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
08 May 2024புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்ப
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
அனிமேஷனில் டோனியின் முகம்?
08 May 2024இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிய
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தனது நடன வீடியோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
08 May 2024புதுடெல்லி, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தனது நடன வீடியோ பதிவுக்கு பிரதமர் மோடியே வரவேற்பு அளித்துள்ளார்.
-
ஆசிரியர்கள் நியமனம் ரத்து தொடர்பான வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
08 May 2024கொல்கத்தா : மேற்குவங்கத்தில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தொடர சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
-
கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
08 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.
-
டி-20-யில் 350 வீக்கெட்கள் வீழ்த்திய இந்தியர்: யுஸ்வேந்திர சாஹல் சாதனை
08 May 2024டெல்லி டி20 கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
-
விசா கொள்கையில் திடீர் மாற்றம்: ஆஸி., நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
08 May 2024மெல்போர்ன், மாணவர்களுக்கான விசா கொள்கையில் ஆஸ்திரேலிய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.
-
வழக்கில் கடவுள் ஆஞ்சநேயரை கடவுளை மனுதாரராக சேர்த்தவருக்கு அபராதம் விதித்தது டெல்லி ஐகோர்ட்
08 May 2024புதுடெல்லி, தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில், கடவுள் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.
-
வரும் 17-ம் மீண்டும் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
08 May 2024வாஷிங்டன், விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் 17-ம் மீண்டும் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.
-
தஙகம் விலை சற்று குறைந்தது
08 May 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனையானது.
-
உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி ஆந்திராவில் பறிமுதல்: 2 பேர் கைது
09 May 2024ஐதராபாத், ஆந்திராவில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்: ஒரு வாரமாக தேடும் போலீஸ்
09 May 2024சிகாகோ, சிகாகோவில் இந்திய மாணவர் மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஒரு வாரமாக தேடியும் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.