எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி மாநாடுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் மாநாடு நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
வருகிற 23-ந்தேதி?
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.
21 கேள்விகள்...
இந்த நிலையில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று முன்தினம் பதிலளித்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
33 நிபந்தனைகள்...
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம்...
முன்னதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்., என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம்.
அனுமதி வழங்கி...
இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது.
விரைவில் அறிவிப்பு...
இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காக திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழகத்தில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்! என்று அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய நிபந்தனைகள்
1) மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள்?
2) பார்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
3) போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.
4) மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும்.
5) மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எத்தனை பேர் வர உள்ளனர்?
6) எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
7) குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
8) கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.
9) நடிகர் விஜய் வருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
கரூரில் ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவி கடத்தல்; மர்ம நபருக்கு வலைவீச்சு
10 Mar 2025கரூர் : கரூரில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற மர்ம நபர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
-
தமிழர்கள் குறித்த பேச்சுக்கு கனிமொழி எதிர்ப்பு: எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருத்தம்
10 Mar 2025புதுடெல்லி : தமிழக அரசை, தமிழக எம்.பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-03-2025.
10 Mar 2025 -
தூத்துக்குடி அருகே ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
10 Mar 2025தூத்துக்குடி : ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சுனிதா வில்லியம்ஸ் வரும் 16-ம் தேதி பூமிக்குதிரும்புகிறார்: நாசா அறிவிப்பு
10 Mar 2025வாஷிங்டன், விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.
-
அமைதியை நிலைநாட்டுவோம்: சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர்
10 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவோம் என்று அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
கராச்சியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலி
10 Mar 2025கராச்சி, கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: கனிமொழி
10 Mar 2025புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று கூறினார்.
-
நடிகை ரன்யா ராவுக்கு அரசு நிலம்: காங்கிரஸ் அமைச்சருக்கு தொடர்பா? கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு
10 Mar 2025பெங்களூரு, தங்கம் கடத்தல் வழக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
-
நெல்லை, குமரி உள்பட தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
10 Mar 2025சென்னை, தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு
10 Mar 2025சென்னை : லண்டனில் தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? - மத்திய கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
10 Mar 2025சென்னை : நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
-
தனுஷ்-நயன்தாரா வழக்கு விசாரணை: ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
10 Mar 2025சென்னை, தனுஷ்-நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு: தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளி; பார்லி. மக்களவை ஒத்திவைப்பு
10 Mar 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ஆண் சடலம்..!
10 Mar 2025சென்னை : போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் ஆண் சடலம் சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மணிப்பூரில் 12 கிளர்ச்சியாளர்கள் கைது
10 Mar 2025இம்பால் : மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
-
அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : அவசர அவசரமாக தரையிறக்கம்
10 Mar 2025டெல்லி : அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பா.ம.க. நிழல் நிதி அறிக்கை வெளியீடு
10 Mar 2025விழுப்புரம் : அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழந்து விபத்து
10 Mar 2025அமெரிக்கா, அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
-
கச்சத்தீவு திருவிழா: படகுகளை இன்று ஆய்வு செய்யும் மீன்துறை அதிகாரிகள்
10 Mar 2025சென்னை : கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் குறித்து மீன்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்கின்றனர்.
-
திருவள்ளூரில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
10 Mar 2025திருவள்ளூர் : தமிழகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
10 Mar 2025சென்னை : இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள் அறிவிப்பு
10 Mar 2025சென்னை : சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.