முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் வரும் 12, 13-ம் தேதிகளில் 'ஆரஞ்சு அலர்ட்'

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      தமிழகம்
Rain 2023-09-29

Source: provided

சென்னை : அரபிக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 12, 13-ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்... 

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9 ஆம் தேதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது.

தாழ்வு மண்டலமாக... 

அதன்படி, நேற்றஉ லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை... 

இதன் காரணமாக கேரளாவில் பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 

10 மாவட்டங்களில்.... 

தமிழகத்தில் இன்று சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை  கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கையில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு எச்சரிக்கை...

வரும் 12-ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்புள்ளது. வரும் 13-ம் தேதி  புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை (ஆரஞ்சு எச்சரிக்கை) பெய்யக்கூடும்.இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து