முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      தமிழகம்
Fissherman 2024-12-02

Source: provided

ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்க சென்ற ஐந்து படகையும் இலங்கையை கடற் படையினர் சிறை பிடித்து படகிலிருந்த 32 மீனவர்களையும் நேற்று அதிகாலையில் கைது செய்தனர். 

ராமேஸ்வரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் 360-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் இந்திய இலங்கை  சர்வதேச கடலோரப் பகுதியில் கடலில் பல்வேறு பகுதிகளில் சென்று கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர் அப்போது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே  மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ஐந்து படகை சிறைப்பிடித்தனர். அதன் பின்னர் படகை சோதனையுட்டு படகில் இருந்த 32 மீனவர்களை கைது செய்தனர் இதில் தங்கச்சிமடம் பகுதி சேர்ந்த சேசு ராஜா என்பவர்க்கு சொந்தமான படகிலிருந்த சில்வஸ்டார்,நாகராஜ், ராஜேந்திரன், வின்சென்ட், இன்பம், இளங்கோ ஆகிய  6 மீனவர்களையும் அதுபோல ராமநாதபுரம் நரிப்பையூர் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர்க்கு சொந்தமான படகில் இருந்த சந்தியாகு,ஜெயபிரகாஷ், ரீகன் பாண்டி ஆகிய 4  மீனவர்களையும், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த  வியாகுலம் என்பவர்க்கு சொந்தமான படகிலிருந்த மணிகண்டன் செல்லையா, கொலம்பஸ், நிதேஷ் ரேம்பீஸ்,ஸ்டீபன், சரத் ஆகிய 7 மீனவர்களையும் அதுபோல தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய மன்றோ என்கவர்க்கு சொந்தமான படகிலிருந்த ரமேஷ்  ஜெரோன்,முனீஸ்வரன்,கேம்பில் விளாங்குளம், ராஜா அந்தோணி ராஜ்  ஆகிய 7 மீனவர்களையும் அதுபோல மூக்கையூர் பகுதியை சேர்ந்த கோபால் என்பவர்க்கு சொந்தமான படகிலிருந்த ஸ்டாலின், பிராங்கிளின்,யோகேஸ்வரன், சதீஷ்குமார், ராஜ்குமார் ,செங்கோல், ராபின் ஸ்டர்வின் ஆகிய 8 மீனவர்களையும் சேர்த்து 32 மீனவர்களையும் கைது செய்தனர். 

அதன் பின்னால் 32 மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து அந்த பகுதியைச் சேர்ந்த கடல் நீரியல் பாதுகாப்பு மின்விளக்கு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததா வழக்குப்பதிந்து மன்னார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினார். மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி மார்ச் 9 ஆம் தேதி வரை சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார் அதன் பேரில. மீனவர்கள் 32 பேரையும் போலீசார்கள் வவுனியா சிறையில் அடைத்தனர். இதுகுறித்த தகவலறிந்த  ராமேசுவரம் மீனவரகள் மத்தியில் பெரும் பட்ட.டமான சூழ்நிலை காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து