முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வங்கி துணை மேலாளர் தற்கொலை

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

திருச்சி, ஆன்லைன் ரம்மியில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி துணை மேலாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தேவர்மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ஈரோடு மாவட்டம் முத்தூரில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, ஜெயக்குமார் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். மேலும், ஆன்லைன் ரம்மியில் விளையாட 2 லட்ச ரூபாய் தரும்படி மனைவியிடம் ஜெயக்குமார் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மியில் 10 லட்ச ரூபாய் இழந்த ஜெயக்குமார் நேற்றுமுன்தினம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நெய்க்காரம்பட்டியில் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து