முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ரூபாய் நோட்டுக்களுடன் பாகிஸ்தானியர் கைது

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

காட்மாண்டு, பிப்.24 - இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்களுடன் நேபாளத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் காட்மாண்டில் கைது செய்யப்பட்ட அந்த பாகிஸ்தானியரிடம் 35 லட்சம் இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்ததாக நேபாள போலீசார் தெரிவித்தனர். மெஹபூப் அலி என்ற இந்த பாகிஸ்தானியர் பஹ்ரைன் நாட்டில் இருந்து விமானம் மூலம் காட்மாண்டில் உள்ள டிரிபுவான் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவரை நேபாள அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 35 லட்சம் மதிப்புள்ள இந்திய கள்ள நோட்டுக்கள் அனைத்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தன. இந்த நோட்டுக்கள் அனைத்தும் பேப்பரில் அச்சிடப்பட்ட கள்ள நோட்டுக்களாக இருந்தன என்று காட்மாண்ட் போலீஸ் தலைமை அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்