முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி முன்னிலையில் தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, டிச.23 - தூத்துக்குடியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. முன்னிலையில் அந்த கட்சியினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். கனிமொழி மேடைக்கு வருவதற்கு முன்பாக திருச்செந்தூர் % தாகுதி எம்.எல்.ஏ. அனிதா. ஆர். ராதா கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பில்லா ஜெகனும் மேடையில் ஏறுவற்ககாக வந்தனர். அவர்களுடன், அவர்களது ஆதரவா ளர்களும் வந்தனர். அப்போது பெரிய சாமியின் ஆதரவாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பில்லா ஜெகன் இருவரும் மேடை ஏற எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு அமளி ஏற்பட்டது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மேடை ஏறாமல் அங்கிருந்து சென்று விட்டார். 

பின்னர் இரவு 8 மணி அளவில் கனிமொழி மேடைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணன் மேடை ஏற முயன்றார். அப்போதும் பெரியசாமி தரப்பினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கனிமொழி, இது தலைவர் கருணாநிதி அறிவித்து நடக் கும் கூட்டம். இதில் யாரும் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றார். இதையடுத்து தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. 

                 

 

               

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்