முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பெண்ணின் மூக்கை துண்டித்த இளைஞர்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், பிப்16 - பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 19 வயது பெண்ணின் மூக்கை வாலிபர் ஒருவர் துண்டித்துள்ளார். 

இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது: பஹவர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவரின் மகளை திருமணம் செய்து கொள்ள, அதே பகுதியைச் சேர்ந்த நதீம் என்ற இளைஞர் விருப்பம் தெரிவித்து உள்ளார். 

இதற்கு பஷீர் மறுப்பு தெரிவித்ததால், நதீம் தனது தந்தை மற்றும் இரண்டு கூட்டாளிகளுடன் வியாழக் கிழமை பஷீரின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களைத் தாக்கினார். அதோடு அவரது மகளின் மூக்கை துண்டித்தார். 

நதீம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்