முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பில்பாவ் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பிவ்பாவ், செப்.23 - பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயினின் கிராணடாவில் பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 4 வீரர் உள்பட பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு வீரரும் தலா இருமுறை மோதினர். இதில் ஆர்மேனியாவின் லெவோன் அரோனியனிடம் மட்டும் ஆனந்த் தோல்வியடைந்தார். இருப்பினும் 6 சுற்றுகள் முடிவில் 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் அவர் 11 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஆனந்தை வென்றபோதிலும் அரோனியன் 10 புள்ளிகளை மட்டுமே பெற்றதால் 2-வது இடம் பெற்றார். ரஸ்லன் போனோமரிவ், வலேஜோ பொன்ஸ் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.

5–வது முறையாக இந்த போட்டியில் பங்கேற்ற ஆனந்த் இப்போதுதான் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்