முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை கல்வியில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - பள்ளியில் சேராத குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதில் இந்தியா முன்னேற்றத்தை கண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
 
ஐ.நா.சபை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது,
 
பள்ளிக்கு வராத குழந்தைகளின் எண்ணிக்கையை குறைத்து அதிக அளவிலான குழந்தைகளை பள்ளியில் சேர செய்வதில் இந்தியா கடந்த 2000ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உலக அளவில் தெற்கு ஆசிய நாடுகளில் தான் பள்ளி செல்லாக்குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நாடுகளில் 2000ம் ஆண்டில் இருந்ததை விட 2012ம் ஆண்டு பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 2.3 கோடி குறைந்துள்ளது.

அதிலும் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிக அளவில் பள்ளி செல்லாக்குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த 2000ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு பள்ளி செல்லாக்குழந்தைகளின் எண்ணிக்கையில் 1.6 கோடி குறைந்துள்ளது. பள்ளி கட்டணங்களில் தள்ளுபடி, மதிய உணவு திட்டங்கள் போன்றவை இந்தியாவின் இந்த முன்னேற்றத்துக்கு காரணங்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து