எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் - உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. உலக கோப்பை இறுதி போட்டியில், முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, ஆரம்பத்திலேயே ஆரோன் பின்ச் விக்கெட்டை டக் அவுட்டில் இழந்தாலும், கேப்டன் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் தயவால் அதிரடியாக ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆகியது.
முன்னதாக, உலக கோப்பை பைனலில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து அணி உலக கோப்பை பைனலை, பதற்றத்தோடு ஆட ஆரம்பித்ததன் விளைவு, முதல் ஓவரிலேயே அதிரடி வீரரும், அந்த அணி கேப்டனுமான மெக்கல்லத்தை இழந்தது. எனவே, மார்டின் கப்திலும், வில்லியம்சனும் நிதானமாக ஆட ஆரம்பித்தனர். எனவே, முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களின் ஆதிக்கமே இருந்தது.
10 ஓவர்களில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அதன்பிறகும், விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 33ஆக இருந்தபோது மார்டின் கப்திலும் (15 ரன்), 12.2 ஓவர்களில் ஸ்கோர் 39ஆக இருந்தபோது, வில்லியம்சனும் (12 ரன்) அவுட் ஆகினர். கப்திலை மேக்ஸ்வெல் பௌல்ட் செய்தார். வில்லியம்சன், ஜான்சன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார்.
இதனால் நியூசிலாந்து தடுமாற்றமடைந்தது. டைலரும், எலியட்டும் நிதான ஆட்டத்தால் அதை சரிகட்ட முயன்றனர். இருவரும் 69 பந்துகளில் 50 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். ஆட்டத்தின் பாதியான 25 ஓவர்களில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்திருந்தது. இதன்பிறகு சற்று வேகம் பிடித்த பேட்டிங் 35 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. அப்போது, டைலர்-எலியட் ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் கடந்தது.
ஆனால், அடுத்த ஓவரிலேயே, டைலர் 40 ரன்களில் நடையை கட்டினார். அதே ஓவரிலேயே கோரி ஆண்டர்சனும் டக் அவுட் ஆனார். இதற்கடுத்த ஓவரில் ரோன்ச் டக் அவுட் ஆனார். 150 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் பவர் பிளேயை ஆரம்பித்த நியூசிலாந்து 151 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது.
இதனிடையே சிறிது நேரம் நின்ற டேனியல் வெட்டோரி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்சன் பந்தில் பௌல்ட் ஆனார். பொறுத்து பார்த்த எலியட்டும் 83 ரன்களில் அவுட் ஆனார்.
171 ரன்களுக்கு 8 விக்கெ்ட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாநதை அதன்பிறகு எழவிடவில்லை ஆஸ்திரேலியா. மேட் ஹென்ட்ரி டக் அவுட் ஆன நிலையில், 11 ரன்கள் எடுத்திருந்த டிம் சவுத்தியை அருமையாக ரன் அவுட்செய்தார் மேக்ஸ்வெல். இதனால் 45 ஓவர்களிலேயே நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆஸ்திரேலியா விரட்டலை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 1.4 ஓவர்களில் 2 ரன்களாக இருந்தபோது, ஆரோன் பின்ச், டரெண்ட் பவுல்ட் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணியினரும், ரசிகர்களும், கொண்டாட்டத்தில் திளைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சியை வார்னர் நீடிக்கவிடவில்லை. தனது வழக்கமான அதிரடியால் நியூசிலாந்து பந்து வீச்சை திணறடித்தார்.இதனால் 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது.
வார்னர் 40 ரன்களுடனும், ஸ்மித் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆனால், அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 45 ரன்களில், ஹென்ட்ரி பவுன்சரில், எலியட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது 12.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 63 ரன்களை எடுத்திருந்தது. எனவே நியூசிலாந்து மீண்டும் ஆட்டத்திற்குள் வர வாய்ப்பு கிடைத்தது.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இதைத் தொடர்ந்து களமிறங்கினார். முதலில் சிறிது பதற்றத்தோடு ஆடிய கிளார்க், பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே நியூசிலாந்தால் ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள்ளாக்க முடியவில்லை. 29 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 151 ரன்களை எடுத்திருந்தது.
வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, 74 ரன்கள் எடுத்திருந்த கிளார்க் ஹென்ட்ரி பந்தில் பௌல்ட் ஆகினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக கைதட்டலுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை கொடுத்தனுப்பினர். கிளார்க் அவுட் ஆனபோது ஆஸ்திரேலியா 175 ரன்களை எடுத்து வெற்றியை நெருங்கியிருந்தது. வாட்சனும், ஸ்மித்தும் இணைந்து 33.1 ஓவரில், வெற்றியை உறுதி செய்தனர்.
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் சதம் அடித்த ஸ்டீவன் ஸ்மித் இப்போட்டியிலும் அருமையாக ஆடி 56 ரன்களுடனும், வாட்சன் 2 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். நியூசிலாந்து தரப்பில் ஹென்ட்ரி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியோடு ஆஸ்திரேலியா 5-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.