முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில கையக சட்டத்தில் திருத்தம் மீண்டும் அவசர சட்டத்தை பிறப்பிக்க ஒப்புதல்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வதற்கான அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் 9 திருத்தங்களுடன் மக்களவையில் கடந்த மாதம் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் வரும் 5ம் தேதியுடன் காலாவதி ஆக உள்ளதால், மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து