எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் - 2 - தமிழகம் மற்றும் புதுவை மாநில சட்டசபைகளுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை மற்றும் புதுவை மாநில சட்டசபைகளுக்கான ஆயுட்காலம் வருகிற மே மாத மத்தியில் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய சட்டசபையை அமைப்பதற்கான தேர்தல் அட்டவணை குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிக்கை மார்ச் 19 ம் தேதி வெளியிடப்படும்.
அன்றைய தினமே (மார்ச் 19) வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி என்றும் அவர் கூறினார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28-ம் தேதி என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசிநாள் மார்ச் 30-ம் தேதி என்றும் அவர் அறிவித்தார். தமிழகம், புதுவை மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுமுதலே அமுலுக்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 59 லட்சம் என்றும் அவர் கூறினார். மேலும் முதன் முறையாக வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். தமிழகம், புதுவையில் ஏப்ரல் 13 ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெற்றாலும்கூட இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து அதாவது வருகிற மே மாதம் 13 ம் தேதிதான் நடைபெறும் என்றும் குரேஷி கூறினார். ஓட்டு எண்ணிக்கை இவ்வளவு நீண்ட நாட்களுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தமிழகம், புதுவையில் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தல்களோடு மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையையும் குரேஷி வெளியிட்டார்.
கேரள மாநிலத்திற்கான வாக்குப் பதிவும், தமிழகத்தைப் போலவே ஏப்ரல் 13 ம் தேதி நடைபெறுகிறது. இங்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் 62 சட்டசபை தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக நடைபெறும் வாக்குப் பதிவில் 64 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 4 ம் தேதியும், அடுத்த கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11 ம் தேதியும் நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநிலத்திற்கான வாக்குப் பதிவு 6 கட்டங்களாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18, 23, 27 மற்றும் மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் இங்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடைபெற இருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அந்தந்த மாநில போலீசாருடன், மத்திய துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் 2011-12 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே இந்த 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேற்கு வங்கமாநிலம், கேரளா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முஸ்தீபு செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணியை ஒழுங்குபடுத்துவதிலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதிலும் மும்முரம் காட்டி வருகின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.