முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துயரில் உழலும் உலக மக்களுக்குவழிகாட்டுகிறது புத்தரின் போதனைகள்: மோடி

திங்கட்கிழமை, 4 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: உலகத்தில் துயருரும் மக்களுக்கு வழிகாட்டுபவையாகபுத்தரின்போதனைகள் திகழ்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பௌத்த மதத்தினர் உள்ள நாடுகளில் நேற்று புத்தரின் பிறந்த தின மான புத்த பூர்ணிமா நேற்று கொண்டாடப்பட்டது. இலங்கையிலும் நேபாளத்திலும் பௌத்த மதத்தினர் அதிக அளவில் வாழ்கிறார்கள். நேபாளத்தில் கடந்த மாதம் இறுதியில் நில நடுக்கம் ஏற்பட்டு 7ஆயிரத்து 200பேர் இறந்திருக்கிறார்கள். அந்த துயர நிலையிலும்  நேபாள நாட்டில் த பூர்ணிமாவை பௌத்தர்கள் அனுசரித்தனர்.

டெல்லியில் நேற்று புத்த பூர்ணிமாவை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  புத்தரின் போதனைகள் உழன்று கொண்டிருக்கும் உலக மக்களுக்கு வழி காட்டுவதாக இருக்கின்றன. நேபாள நாட்டில் பெரும் நில நடுக்கம் ஏற்பட்டு அந்த நாட்டு மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து நேபாள மக்கள் விரைவில் மீண்டெழுவார்கள். நேபாள மக்களின் துயரில் நாம் பங்கு கொண்டு அவர்களது கண்ணீரை துடைக்க வேண்டும்.

நில நடுக்கம் ஏற்பட்ட நேபாளம் தான் புத்தர் பிறந்த இடமாகும்.அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மிகப்பெருமளவு ஆகும். அந்த துயரத்தில் இருந்து எப்போது அந்த நாட்டு மக்கள் மீளுவார்கள் என்பதை யாராலும் மதிப்பிட முடியாது. தற்போது வன்முறை உச்ச நிலையில் இருக்கிறது. உலகம் ரத்தத்தில் நனைந்துள்ளது.இந்த நிலையில் துயரத்தில் உழலும் மக்களுக்கு வழிகாட்டுபவையாக புத்தரின் போதனைகள் திகழ்கின்றன என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து