முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தபால் நிலையங்களில் திருப்பதி தரிசன டிக்கெட்: திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு

புதன்கிழமை, 6 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

ஐதராபாத், தபால் நிலையங்களில் திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திர பிரதேச சர்க்கிள் தலைமை போஸ்ட் மாஸ்டர் சுதாகர் கூறுகையில்,

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் எடுப்பதற்கு வசதியாக தபால் அலுவலகங்களில் திருப்பதி தரிசன டிக்கெட் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை திருப்பதி கோவில் தேவஸ்தானம் வழங்கியுள்ளது. இனி நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படும். இதற்கான சாப்ட்வேர் தயாரிப்பு பணி முடிவடைந்தது. மற்ற மாநிலங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் தனியாக சென்று தரிசனம் செய்வதற்கும், குடும்பமாக சென்று தரிசனம் செய்வதற்கும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் தபால் நிலையங்களில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுகிறது. போஸ்ட் ஏ.டி.எம். எனப்படும் இந்த மையம் முதன்முதலாக ஐதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து கொள்ளலாம். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உல்ள 95 தலைமை தபால் நிலையங்களில் போஸ்ட் ஏ.டி.எம். அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 36 ஏ.டி.எம். மையங்கள் அமைகின்றன. இதில் ஜூப்ளிஹில்ஸ் மற்றும் செகந்திராபாத்தில் இன்னும் 10 நாட்களில் ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்படும். இதில் ஒரு முறை அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை பணம் எடுத்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் வரை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து