முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் கனமழை, வெள்ளம்: 1.50 லட்சம் பேர் பாதிப்பு

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

லக்கிம்பூர்,ஜூலை. -18 - அசாம் மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 1.50 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். 

இம்மாநிலத்தில் சோனித்பூர், லக்கிம்பூர் மற்றும் டெமாஜி மாவ்டடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் வசிக்கும் 1.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையால் பிரம்மபுத்திரா, அதன் கிளை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  லக்கிம்பூர் மாவட்டத்தில் மட்டும் 105 கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலத்த மழை காரணமாக ரங்கவாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி 4 பேர் இறந்தனர். இதே டெமாஜி மாவட்டமும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  டெமாஜி - லக்கிம்பூர் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டிருந்தது. இது போல் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சோனித்பூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் 25 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கு வசித்தவர்கள் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்