முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா வெற்றி: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னணியில் இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஓட்டு வித்தியாசம் அதிகமாகி வருவதை அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற ராணிமேரி கல்லூரி முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புரட்சித்தலைவி வாழ்க என கோஷமிட்டனர். அ.தி.மு.க தலைமை கழகத்திலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன்பும் அ.தி.மு.க தொண்டர்கள், மகளிர் அணியினர் திரண்டு வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், செந்தமிழன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமான கட்சி பிரமுகர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மகளிர் அணியினர் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இரட்டை இலை சின்னத்துடன் தொண்டர்கள் நடனமாடினர். இதே போல் ஒவ்வொரு ஊர்களிலும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து