எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் துவக்க விழாவில் கலந்து கொள்ளும்படி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டார் என்றும், வெளிநாடு செல்வதால் தன்னால் பங்கேற்க இயலவில்லை என்றும் அவர் கூறியதாக தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறி இருக்கிறார்.
வாய்க்கு வந்ததை தனது கருத்தாக பேட்டி அளிப்பதை வாடிக்கையாக கொண்ட தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ‘நாகாக்க’ வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டிருக்கிறார். அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோமீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயிலின் பயணிகள் சேவையை துவக்கி வைத்தார்கள். அந்த நிகழ்விலேயே, முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மெட்ரோ இரயிலின் கோயம்பேடு பணிமனை மற்றும் கோயம்பேடு, சென்னை புறநகர்ப் பேருந்து நிலையம் (சிஎம்பிடி), அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களையும் துவக்கி வைத்தார். மெட்ரோ இரயில் தொடக்க விழாவைப் பற்றி தமிழக பிஜேபி கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ள பேட்டி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.
எந்தப் பொருள் பற்றியும் முழுவதுமாக எதையும் தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேட்டிகள் அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். அந்த வகையிலேயே மெட்ரோ இரயில் தொடக்க விழா பற்றிய அவரது பேட்டி அமைந்துள்ளது. அந்தப் பேட்டியில், மத்திய மந்திரிகளை விழாவுக்கு அழைத்திருக்கலாம்.
இந்த ஆட்சியில் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜனநாயக வழிமுறைகளும் தெரியும்; அரசு நிர்வாகமும் தெரியும்; அரசு மரபுகளும் தெரியும்; அரசு நடைமுறைகளும் தெரியும். எந்த ஒரு அரசு விழாவிற்கும் முறைப்படி யாரை எப்படி அழைக்க வேண்டும் என்பதும் முதலமைச்சருக்கு நன்றாகத் தெரியும். முதலமைச்சர் ஜெயலலிதா இன்றைக்குப் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர் அல்ல. ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளவரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். முறைப்படி எதையும் செய்பவரும் ஜெயலலிதா தான்.
இவையெல்லாம், ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தெரியாது என்றால், தனக்குத் தெரியாத விஷயங்களை அவர் பேசாது இருப்பதே நல்லது ஆகும். சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் மற்றும் இதர அமைப்புகள் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு, சட்டப் பூர்வமான பாதுகாப்பு அனுமதியை இந்த மாதம் வழங்கினர். ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதால், மெட்ரோ ரெயில் சேவையைத் துவக்கி வைப்பதற்கான அனுமதியை வழங்கும்படி தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையம், சென்னை மெட்ரோ ரெயில் சேவையை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்தபின் துவக்கி வைக்கலாம் எனவும், ஆனால், அவ்வாறு மெட்ரோ ரெயில் சேவை துவக்கப்படுவது பற்றி, வாக்குப் பதிவு முடியும் வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது. எனவே, சென்னை மெட்ரோ ரெயிலின் சேவை 29-ந் தேதி அன்று துவக்கப்பட முடிவெடுத்த போதும், அது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்திற்குத் தொடர்புடைய துறையாகும்.
எனவே, சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை துவக்க விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடு பங்குகொள்ள வேண்டும் என்பதே முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பமாகும். 29-ந் தேதி அன்று நடைபெறும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை துவக்க விழாவில் கலந்து கொள்ளும்படி மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு 16-ந் தேதி அன்று முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது.
வெங்கையா நாயுடு 28-ந் தேதி அன்று வெளிநாடு செல்வதாகவும், 11.7.2015 அன்றுதான் இந்தியா திரும்புவதாகவும், எனவே, அதுவரை, இந்தத் திட்டத் துவக்க விழாவை ஒத்திப்போட வேண்டாம் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தபடி 29-ந் தேதி அன்றே துவக்க விழாவை நடத்திட வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஜனநாயக முறை பற்றியும், மரபுகள் பற்றியும் எங்களுக்கு நன்கு தெரிந்துள்ளதால் தான், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடுவை மெட்ரோ இரயில் துவக்க விழாவிற்கு நாங்கள் முறைப்படி அழைத்திருந்தோம். மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலாததால்தான், அந்தத் துறையின் இணைச் செயலாளர் இந்த விழாவில் கலந்து கொண்டார். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு பொருள் பற்றியும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்ததையே தனது கருத்தாக பேட்டி அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் என்பதை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நிரூபித்துள்ளார்.
யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்ற திருக்குறளை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.