முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் ஆட்டோக்களுக்குத் தடை

வியாழக்கிழமை, 23 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

டாக்கா - வங்க தேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆட்டோக்கள் உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்கள் ஓட்ட அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. வங்கதேசத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு இந்த முச்சக்கர வாகனங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சக அதிகாரி தெரிவித்தார். அரசின் தடைக்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அரசு விதித்துள்ள இந்தத் தடை பல்லாயிரக்கணக்கானவர்களை வேலை இழக்கச் செய்துவிடும் என்றும் பொதுமக்களுக்கு இதனால் பெரும் தொல்லைகள் ஏற்படும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து