முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் வன்முறையால் நாடே அதிர்ச்சி : பிரதமர் மோடி கவலை

ஞாயிற்றுக்கிழமை, 30 ஆகஸ்ட் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக குஜராத்தில் நடந்த கலவரங்களால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி ரேடியோ மூலம் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சிக்கு மான் கி பாத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடி நேற்று ரேடியோ மூலம் உரையாற்றினார்.அப்போது அவர் கூறுகையில்,அண்மையில் குஜராத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. காந்தி மற்றும் பட்டேலின் மண்ணில் நடந்த வன்முறையால் தேச மக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்