எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மை தான் என்று அது குறித்து விசாரிப்பதற்காக அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்ட குழு கூறியிருக்கிறது. இலங்கை மீதான போர்க் குற்றச்சாற்றுகளை ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக் குழு ஏற்கனவே உறுதி செய்திருந்தாலும் இலங்கை அரசின் குழுவே அதை ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இலங்கைப் போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்குற்ற புகார்கள் குறித்து விசாரிக்க கொழும்பு உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரணகம தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய அதிபர் மகிந்த இராஜபக்சே அமைத்திருந்தார்.
அக்குழுவின் அறிக்கை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்நாள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் தான் சிங்களப்படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ‘‘இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களப்படையினர் போர்க் குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான். சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களை சிங்களப்படையினர் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்வது போல சேனல்–4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ உண்மையானது தான். இலங்கைப் போரின் முடிவில் சரணடைவதற்காக வெள்ளைக்கொடியேந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த குற்றச்சாற்றுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதால் அதுபற்றி நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை மீதான போர்க் குற்றச்சாற்றுக்கள் குறித்த விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதி பரணகம குழு பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், இறுதிகட்ட போரில், ஐ.நா கூறியதைப் போல 40,000 தமிழர்கள் கொல்லப்படவில்லை; இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்படவில்லை என்ற அக்குழு கூறியிருப்பதை ஏற்க முடியாது. இக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் புதியவை அல்ல... ஏற்கனவே பல அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டவை தான் என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை வரவேற்கத்தக்கவை.அதேநேரத்தில், போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரிப்பதற்காக இந்த விசாரணை அறிக்கை பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த அறிக்கையை காரணம் காட்டி‘‘இலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்ததை அரசின் விசாரணைக்குழு உறுதி செய்திருப்பதிலிருந்து அதன் நடுநிலையை உணரலாம். அதேபோல் போர்க்குற்றங்கள் குறித்த நீதி விசாரணையையும் இலங்கை நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடத்தும்’’ என்று உலக அரங்கில் இலங்கை வாதிடலாம்.இந்த ஐயத்தை உறுதி செய்யும் வகையில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் சிறிசேனா மீண்டும் கூறியிருக்கிறார்.சிங்களப்படையினரின் போர்க்குற்றங்களை உறுதி செய்யும் வகையில் இன்னும் எத்தனை ஆதாரங்கள் வெளி வந்தாலும், இலங்கையின் நிலைப்பாட்டில் அது சாதகமான மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்தாது என்பது தான் உண்மை. இன்னும் கேட்டால், போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய இலங்கை நீதிமன்றம் விசாரணை நடத்தும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஒப்புக் கொண்ட இலங்கை அரசு, அதிலிருந்து பின் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.அதன் ஒரு கட்டமாகத் தான் போர்க்குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அதிபர் சிறிசேனா கூட்டியிருக்கிறார். அடுத்தக்கட்டமாக இலங்கை மதத் தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தவுள்ளார். போர்க்குற்றங்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்துவதற்கோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கோ அவர்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.எனவே, இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டுமானால், அதற்கு பன்னாட்டு நீதிமன்ற விசாரணை மட்டும் தான் ஒரே தீர்வு ஆகும்.எனவே, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.